siruppiddy

24/6/13

இராணுவ வீரர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !!


உதகை வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக இராணுவக் கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை பொலிஸார் தடுத்தனர்.
 அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இராணுவ சப்ளை டிப்போ சாலையில் நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
 மேலும் இலங்கைக் கொடியையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர்.
 இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
 இதனிடையே, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
 மேலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக