siruppiddy

29/6/13

அதிர்ச்சியில் உறைந்துள்ள கோத்தபாய"?

 
கசிந்தது இரகசியம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்ட சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு, தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களினதும் இடையிலான தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டு வருகிறது. சீனாவின் உதவியுடன் ஸ்கைப் உரையாடல்களையும் ஒட்டுக் கேட்பதற்கு முயற்சிப்பதாக அறிய முடிகிறது.
 ஆனால், தமிழர்களை சிறீலங்கா ஒட்டுக் கேட்க முயற்சிக்கையில், சிங்களத்தின் புலனாய்வு மூளையாகக் கருதப்படும் கோத்தபாயவின் தொலைபேசி உரையாடல்களை மேற்குலகின் சக்திமிக்கதொரு நாடு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
 மேற்குலகின் குறித்த ஒரு தூதுவராலயத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி தொழில்பட்பம் வாய்ந்த கருவிகள் ஊடாகவே ஒட்டுக் கேட்கும் இந்தச் சம்பவம் நிகழ்துள்ளதாக அறியமுடிவதோடு, குறித்த தூதுவராலயத்துக்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த இரகசியத் தகவல் கசிந்ததும், அதிர்ச்சியடைந்த கோத்தபாய தனது தொலைபேசி சேவை வழங்குனருக்கு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக