siruppiddy

6/6/13

புலிகளின் குண்டுகள் என்நேரமும் கொழும்பில் வெடிக்கலாம் !


விடுதலைப் புலிகளின் குண்டுகள் என்நேரமானாலும் கொழும்பில் வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது ? கொழும்பில் மறைவான இடம் ஒன்றில் 1000 KG எடைகொண்ட வெடிபொருட்கள், 3 இலகுரக துப்பாக்கிகள், மற்றும் 3500 ரவைகள் இன்னமும் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ,வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இன் நபர் பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய நபர் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெடிபொருட்கள் எங்கே ? தற்சமயம் இது யார் கைகளில் உள்ளது என்பது தொடர்பாக ஆராய இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 ஒன்று அல்லது இரண்டு KG வெடிபொருட்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் 1000KG வெடி பொருட்களா என்று வாயைப் பிளக்கிறார்கள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர். கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் சல்லடை போட்டு தேடவேண்டிய நிலை தற்போது தோன்றியுள்ளது.

இதுமட்டும் இதற்கு முக்கிய காரணம் அல்ல. இன்னும் சில மாதங்களில் இலங்கையில், காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இன் நேரம் பார்த்து இப்படி ஒரு சர்சை கிளம்பியுள்ளது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக