கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இன ஒடுக்குமுறைகள் தான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
மாகாணசபைத் தேர்தல் நாட்டை பிளவுபடுத்தும் என்ற அச்சம் தேவையற்றது.
அத்தகைய பரப்புரைகளைச் செய்யும் ஜாதிக ஹெல உறுமயவோ, தேசிய சுதந்திர முன்னணியோ பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவைக் கொண்டவையல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக