siruppiddy

5/6/13

தனி ஈழம் விரைவில் மலரும்: ???

கொந்தளிக்கிறார் வீரவன்ச""ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை தோற்கடிக்க சிறிலங்கா படையினரால் முடியாது அது நாட்டு மக்களினால் தான் முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்13ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலான கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஆயுத போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஈழம் தொடர்பான கருத்துக்களும் பிரச்சாரங்களும் இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

 அத்துடன் இவர்கள் வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் புதிய ஈழப்போராட்டமொன்றை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.

 தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடாத்தப்பட்டால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபடுவார்கள் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலை நிறுத்துமாறு இனவாத அமைப்புகள் மற்றும் கடும்போக்குவாத கட்சித் தலைவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக