சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் பெண் வீராங்கணைகளை ஈடுபடுத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட அமைதி காக்கும் பெண் படைவீராங்கணைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
குறித்த பெண் வீராங்கணைகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும், அழைப்பு கிடைத்தால் அவர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய nதிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் பெண் அமைதி காக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக பால் நிலை சமத்துவம் தொடர்பிலான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் பெண் வீராங்கணைகள் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, 150 இலங்கை அமைதி காக்கும் படைவீரர்கள் லெபனானில் கடமையாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக