siruppiddy

7/7/13

மிரட்டலால் ஆடிப் போயுள்ள சிறிலங்கா!


 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக இந்தியா விதித்த நிபந்தனைகள் குறித்து சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வாய்திறக்க மறுத்துள்ளார்.
 

13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு விளக்குவதற்காக, புதுடெல்லி சென்றிருந்த பசில் ராஜபக்ச, கொழும்பு திரும்பியுள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த பசில், அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இது குறித்து தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேச முடியாது எனவும் இது இராஜதந்திர விவகாரங்களில் முக்கிய அம்சம் எனவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை பசில் சந்தித்திருந்தார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க வாய்ப்பு கேட்ட போதும், இந்திய அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக