siruppiddy

25/7/13

பெண்களின் விவரங்களை திரட்டும் படையினர்!


 யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தந்தப் பகுதிகளிலுள்ள படையினரே மக்களைப் பொது இடத்துக்கு அழைத்து இந்த விவரங்களைப் பதிவு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
அடுத்ததாக இவ்வாறான விவரங்களை திரட்டுவது தனியாகவும் வறுமையுடனும் வாழும் பெண்களை இலக்குவைத்து சமூக விரோத செயலில் சிங்களப் படையினர் ஈடுபடலாம் எனவும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நேற்று முன்தினமும் திங்கட்கிழமை உடுவில் ஆலடி வைரவர் கோயிலடிகுச் சென்ற மானிப்பாய் படை அதிகாரிகள் மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
விதவைப் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் தொடர்பான குடும்ப விவரங்களையே அவர்கள் பதிவு செய்துள்ளனர்.இவையெல்லாம் அவர்களின் மீதான மனிதாபிமானத்திற்காக மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரும் மாகாணசபை தேர்தலை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்படுகிறது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக