siruppiddy

19/7/13

காவல்துறைக்கும் துப்பாக்கி குழுவிற்கும் இடையில் மோதல்


கொழும்பு கல்கிசை மவுன்ட்லெவன்யா - ஹுலுதுகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கும் மற்றுமொரு குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சண்டையிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருட்களை தேடி கல்கிசை ஹுளுதாகொட குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் இன்றிரவு சென்றிருந்த சமயம் காவல்துறையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோத்திலேயே சந்தேகநபர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக