siruppiddy

28/7/13

பணத்திற்காக கட்சித் தாவவில்லை



பணத்திற்காக கட்சித் தாவவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் அனைவருக்கும் எதிராகவும் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது வழமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை எனவும், பணம் பெற்றுக்கொண்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனி எதிர்காலம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
62 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் உண்மை வெளிப்பட்டு;ள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக