siruppiddy

24/7/13

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பிழையானது




பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக்கின் கருத்து முற்றிலும் பிழையானது என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டான்சூக் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் விசாரணைகளை மூடிமறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என டான்சூக் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். டான்சூக் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஜனாதிபதியை சந்திப்பாரா என்பதனை உறுதிபடக் கூற முடியாது எனவும் அவ்வாறான ஓர் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டான் சூக் உள்ளிட்ட பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடையாது எனவும் உயர் மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக