இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை விஜயம் குறித்து, நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையி;ல் பேரவையின் 24ம் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
அமர்வுகளின் ஆரம்ப உரையை நவனீதம்பிள்ளை ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வம் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையில் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு இந்த விஜயம் சந்தர்ப்பமாக அமையும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக