siruppiddy

23/7/13

ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் என்ன?



சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.  வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர்.. பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம், 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல்லிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக நேற்று குறிப்பிட்டிருந்தேன்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ம் ஆண்டு தீர்மானத்தின் மீது இந்த தீர்மானம் கொண்டு வரப்படும்.

இந்தத் தீர்மானம், சிறிலங்கா அரசாங்கத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளும்.

இது தான் தீர்மானத்தின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்.” என்று பதிலளித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக