siruppiddy

15/7/13

திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால்??


ஸ்ரீலங்காவின் 13ம் திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தினால் வீதியில் இறங்கி போரட வேண்டி நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் முன்னாள் அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் செய்துகொள்ளப்பட்ட 13ம் திருத்தச் சட்ட உடன்படிக்கை இரத்துச் செய்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக